உள்ளூர் செய்திகள்
அலங்காநல்லூர் அருகே கோவில் கும்பாபிஷேகம்
- அலங்காநல்லூர் அருகே கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் பங்காளிகள் செய்திருந்தனர்.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் அருகே உள்ள மேலசின்னணம்பட்டி கிராமத்தில் மூங்கிலணை காமாட்சி அம்மன், விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. 2 நாட்கள் நடந்த யாகசாலை பூஜையில் சிறப்பு ஹோமங்கள் நடந்தன. கோ பூஜை, மகா கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி புனித நீர் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் பங்காளிகள் செய்திருந்தனர்.