உள்ளூர் செய்திகள்

காளியம்மன்-மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-02-01 07:02 GMT   |   Update On 2023-02-01 07:02 GMT
  • அலங்காநல்லூர் அருகே காளியம்மன்-மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
  • விழா ஏற்பாடுகளை விட்டங்குளம் மேற்கு தெரு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வைரவநத்தம் ஊராட்சி விட்டங்குளம் மேற்கு தெருவில் உள்ள காளியம்மன், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கடந்த 2 நாட்களாக 3 கால யாக பூஜையுடன் மங்கள இசை முழங்க கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாவதி தீபாராதனை நடைபெற்றது. இன்று காலையில் யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்தது.

பின்னர் சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இதில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பா பிஷேத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கப் பட்டது.

விழா ஏற்பாடுகளை விட்டங்குளம் மேற்கு தெரு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News