இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யவேண்டும்
- தண்டனை காலத்திற்கு பின்னரும் சிறைவாசம் செய்கிற இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யவேண்டும்.
- சட்டசபையில் பூமிநாதன் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்துள்ளார்.
மதுரை
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தில் போது மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசி னார். அப்போது அவர் கூறிய தாவது:-
மனித குலத்திற்கு சட்டம், தண்டனை என்பதெல்லாம் ஒரு சீர்திருத்த நடவடிக்கை தான். அந்த வகையில் சீர்திருத்த நடவடிக்கைக்காக தண்டனைகள் முடிந்த பின்னரும் தண்டனை அனுபவிப்பது என்பது மனித குலத்தில் சகிக்க முடியாத செயலாகும்.
அந்த வகையில் சிறைச்சாலைகளிலே தண்டனை காலம் முடிந்து 20 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசிகள் குறிப்பாக இஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளனர்.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் வரிக்கேற்ப தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்ற முதல மைச்சர் அவர்கள் இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கைகளை எடுத்து தண்டனை காலம் முடிந்து சிறையில் வாடும் சிறை வாசிகள் மற்றும் இஸ்லாமிய சிறைவாசிகளை உடன டியாக விடுதலை செய்வ தற்கு தேவையான நடவ டிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.