மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
- மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.
- பன்னாட்டு கருத்தரங்க நூலினை கல்லூரி முதல்வர் ராமசுப்பையா வெளியிட்டார்.
மதுரை
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு நடத்தும் கி.ரா.வின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கி.ரா.வின் படைப்புலகம் என்னும் பன்னாட்டு கருத்தரங்கு நடந்தது. முனைவர் பட்ட ஆய்வாளர்கள், தமிழ் அறி ஞர்கள், பேராசிரியர்கள் மாணவர்கள் என பலரும் தங்கள் கட்டுரைகள் எழுதி அவற்றை நூலாக்கம் செய்து நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் விஜய ராகவன் தலைமை தாங்கி னார். கல்லூரியின் தலைவர் ராஜகோபால், பொருளாளர் ஆழ்வார் சாமி அவர்கள் முன்னிலை வகித்தனர். இயக்குனர் பிரபு வாழ்த்துரை வழங்கி னார்.
விழாவில் துறைத்தலைவர் பரிமளா வரவேற்றார். முத்துராஜா நன்றி கூறினார். இப்பன்னாட்டு கருத்தரங்க நூலினை கல்லூரி முதல்வர் ராமசுப்பையா வெளியிட, சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தர்மன் பெற்றுக்கொண்டார்.
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள் கருப்ப சாமி, ஜோதி முருகன், முத்துராஜா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.