உள்ளூர் செய்திகள்

சிறுமி-இளம்பெண் உள்பட 4 பேர் மாயம்

Published On 2022-12-04 13:18 IST   |   Update On 2022-12-04 13:18:00 IST
  • சிறுமி-இளம்பெண் உள்பட 4 பேர் மாயமானார்கள்.
  • கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை கோச்சடை காளான்கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் கீர்த்திகா (வயது 17). சம்வத்தன்று அவரது தந்தை, கீர்த்திகாவை பெத்தானியாபுரத்தில் உள்ள பாட்டி வீட்டருகே இறக்கி விட்டு சென்றார். ஆனால் அவர் பாட்டி வீட்டுக்கு செல்லாமல் மாயமானார். பல இடங்களில் தேடி யும் கண்டுபிடிக்க முடிய வில்லை.

மதுரை பெத்தானியா புரம் மேட்டுத்தெரு காளி யம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் துர்காதேவி (13). பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்த இவர் சம்பவத்தன்று திடீரென மாயமானார்.

திருப்பூர் மாவட்டம் கரைபுதூர் சென்னிமலை பாளையத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (52). இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள சகோதரர் வீட்டுக்கு வந்தார்.

சம்பவத்தன்று ஊருக்கு செல்வதாக கூறி சென்ற அய்யப்பன் அங்கு செல்லாமல் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

மதுரை சிலைமான் அருகே உள்ள எஸ்.புளியங்குளம் கே.கே.நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி (72). இவர் சம்பவத்தன்று திடீரென மாயமானார். அவரது மகள் மணிமேகலை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்கமுடி யவில்லை.

மேற்கண்ட 4 சம்பவங்கள் தொடர்பாக கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News