உள்ளூர் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா

Published On 2023-09-21 08:24 GMT   |   Update On 2023-09-21 08:24 GMT
  • தச்சம்பத்து கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடந்தது.
  • உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடந்தது.

சோழவந்தான்

சோழவந்தான் அருகே தச்சம்பத்து பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் நடந்தது. முதல் நாள் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடந்தது. இதைத் தொடர்ந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமம் செயலாளர் சுவாமி பரமானந்த சுவாமி பக்தி சொற்பொழிவாற்றினார். 2-ம் நாள் விநாயகருக்கு மஞ்சள் அபிஷேகம் கோமாதா பூஜை மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர்கள் தேனூர் விடி பாலு திருவேடகம் பழனியம்மாள் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 3-ம் நாள் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி புறநகர் மாவட்ட தலைவர் குருஜி ராமச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், மாவட்டச் செயலாளர் ரமேஷ், ஒன்றிய தலைவர் முத்துப்பாண்டி, ஒன்றிய துணைத் தலைவர் ராஜா, நிர்வாகிகள் தனசேகரன், பொன்னையா, சுரேஷ்குமார், பாபு, காசி, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தேனூர் கவுன்சிலர்கள் சவுத்ரி நல்ல மணி திருவிடம் கவுன்சிலர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். சிலை ஊர்வலம் கிராமத்தில் வலம் வந்தது. விழா ஏற்பாடுகளை பச்சமுத்து, பாலகிருஷ்ணாபுரம் இந்து முன்னணி மற்றும் விநாயகர் கமிட்டி குழுவினர் செய்திருந்தனர். சமயநல்லூர் ஏட்டு சிவபாலன் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags:    

Similar News