உள்ளூர் செய்திகள்

எஸ்.என்.கல்லூரியில் நிறுவனர் தினவிழா

Published On 2023-02-18 13:37 IST   |   Update On 2023-02-18 13:37:00 IST
  • எஸ்.என்.கல்லூரியில் நிறுவனர் தினவிழா நடந்தது.
  • இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை

சரஸ்வதி நாராய ணன் கல்லூரியின் நிறுவனர் தினவிழா கல்லூரி செயலர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. வணிகவியல் துறை தலைவர் ஜெயக்கொடி வரவேற்று பேசினார்.

முதல்வர் கண்ணன் தொடக்கவுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் நிர்மலா மோகன் 'ஈதல் இசைபட வாழ்தல்' என்ற தலைப்பில் பேசினார்.

நாராயணன் செட்டியார் அறக்கட்டளை மூலமாக இக்கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகை மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை முதல்வர் மோதி லால் நன்றி கூறினார்.

Tags:    

Similar News