உள்ளூர் செய்திகள்

மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

Published On 2023-04-01 07:58 GMT   |   Update On 2023-04-01 07:58 GMT
  • மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடக்கிறது.
  • மேற்கண்ட தகவலை மீனாட்சி அம்மன் கோவில் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

மதுரை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலின் உபகோயிலான தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா வருகிற 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. அன்று மாலை 6 மணியளவில் மாரியம்மன் மின் அலங்காரம் செய்யப்பட்ட பூப்பல்லக்கில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் அம்மன் சன்னதி, கிழக்கு வாயிலில் இருந்து புறப்பாடாகி, அம்மன் சன்னதி தெரு, கீழ மாசி வீதி, தெற்கு மாசி வீதி, மேல மாசி வீதி, வடக்கு மாசி வீதி, யானைக்கல், வடக்கு வெளி வீதி, கீழ வெளி வீதி, காமராஜர் சாலை வழியாக, தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் வந்து சேரும்.

அதன் பின்னர் மாரியம்மனுக்கு பூச்சொரிதலும், தீபாராதனையும் நடைபெறும். மேற்கண்ட தகவலை மீனாட்சி அம்மன் கோவில் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News