உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி முதியவர் பலி

Published On 2022-10-13 08:08 GMT   |   Update On 2022-10-13 08:08 GMT
  • மதுரை அருகே வாகனம் மோதி முதியவர் பலியானார்.
  • இதுகுறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் சமயநல்லூரில் திண்டுக்கல்- திருமங்கலம் தேசிய 4 வழிச்சாலையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தார்.

வெள்ளை சட்டையும், காவி வேட்டியும் அணிந்திருந்தவர் யார்? எந்த ஊர்? என்ற விபரம் தெரியவில்லை.

இது சம்பந்தமாக சமயநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி முத்து கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News