சோழவந்தானில் தி.மு.க. பொதுக்கூட்டம்
- சோழவந்தானில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
- சோழவந்தானில் மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இந்த கூட்டம் நடந்தது.
சோழவந்தான்
சோழவந்தானில் மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுகூட்டம் நடந்தது.
அமைச்சர் பி.மூர்த்தி தலைமை தாங்கினார். அவர் பேசுகையில்,சோழவந்தான் ரெயில்வே மேம்பால பணிகள் முடிந்து 3 மாதங்களில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தலைமை கழக பேச்சாளர்கள் கம்பம் பாண்டியன், ஆற்காடு அகிலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வெங்கடேசன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் பசும்பொன்மாறன், பால.ராஜேந்திரன், தனராஜ், பேரூர் செயலாளர்கள் சத்தியபிரகாஷ், சேர்மன் பால்பாண்டி, ரகுபதி, பொதுகுழு ஸ்ரீதர், பேரூராட்சி தலைவர் ஜெயராமன், மாவட்ட அவை தலைவர் பாலசுப்பிரமணியன், நகரத் துணைச் செயலாளர் ஸ்டாலின், பேரூராட்சி துணை தலைவர்கள் லதாகண்ணன், கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பிரமணி, வசந்தகோகிலா சரவணன், கார்த்திகா ஞானசேகரன், ரேகா வீரபாண்டி, பேரூர் கவுன்சிலர்கள் ஈஸ்வரி ஸ்டாலின், முத்துசெல்வி சதீஷ், கொத்தாளம் செந்தில் குருசாமி, சிவா, ஊராட்சி தலைவர்கள் சிறுமணி, துணை தலைவர் கேபிள் ராஜா, மாவட்ட பிரதிநிதி சுரேஷ், வார்டு செயலாளர் நாகேந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.