டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்
- மதுரை அருகே டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- ஹோமியோபதி மாத்திரைகள் வார்டு கவுன்சிலர் மூலமாக வழங்கப்பட்டது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரியும், நகராட்சியும் இணைந்து டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாமை நடத்தியது. திருமங்கலம் நகராட்சியில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமில் டெங்கு காய்ச்சல் வருவதை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹோமியோபதி மாத்திரைகள் வார்டு கவுன்சிலர் மூலமாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஹோமியோபதி மருத்துவர் கார்த்திகேயன் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து பேசினார். தொடர்ந்து அரசு ஹோமியோபதி மருத்துவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு திருமங்கலம் நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமை வகித்தார். கவுன்சிலர்கள் திருக்குமரன், வீரக்குமார், சின்னச்சாமி சுகாதார ஆய்வாளர்கள் அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட்பட பலர் கலந்து கொண்டனர். ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கவுன்சிலர் உடன் சேர்ந்து வீடு வீடாகச் சென்று மாத்திரை வழங்கினர்.