உள்ளூர் செய்திகள்

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-04-26 07:29 GMT   |   Update On 2023-04-26 07:29 GMT
  • மேலூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • வி.ஏ.ஓ.க்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது.

மேலூர்

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக இருந்த லூர்து பிரான்சிஸ் மணல் கடத்தலை தடுத்ததற்காக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து மேலூர் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மேலூர் தாலுகா அளவிலான வி.ஏ.ஓ.க்கள், வருவாய்த்துறையினர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News