உள்ளூர் செய்திகள்

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது. 

மருத்துவ செலவு பண பலன்கள் சரியாக கிடைக்கவில்லை என கலெக்டரிடம் புகார்

Published On 2023-06-20 09:51 GMT   |   Update On 2023-06-20 09:51 GMT
  • மருத்துவ செலவு பண பலன்கள் சரியாக கிடைக்கவில்லை என ஓய்வூதியர்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
  • அந்தந்த பகுதி அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரித்து குறைகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தினார்.

மதுரை

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் கலெக்டர் சங்கீதா தலைமையில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கருவூல கமிஷனர் மற்றும் ஓய்வூதியத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 149 ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை கலெக்டரிடம் தெரிவித்தனர்.

இதில் அதிகமானோர் சரியான முறையில் ஓய்வூதிய பணம் வந்து சேருவதில் பிரச்சினை ஏற்படுகிறது என்றும், மேலும் குடும்ப அட்டை மருத்துவ செலவுகளுக்கான பண பலன்கள் கிடைப்பதில் சிரமம் இருக்கிறது என்றும் தெரிவித்தனர். இவர்களின் குறைகளைக் கேட்ட கலெக்டர் அந்தந்த பகுதி அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரித்து குறைகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தினார்.

Tags:    

Similar News