உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவிகள் மாயம்

Published On 2023-07-20 09:44 GMT   |   Update On 2023-07-20 09:44 GMT
  • கல்லூரி மாணவிகள் மாயமானார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

மதுரை

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள கொ.பாறைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் ஜெயலட்சுமி (வயது 19). இவருக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இவர் செக்கானூரணி பகுதியில் உள்ள கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மகளை கண்டுபிடித்து தருமாறு செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் கணேசன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விக்கிரமங்கலம் அருகே உள்ள சக்கரப்ப நாயக்கனூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபாண்டி. இவரது மகள் கௌசல்யா (வயது 19). நிலக்கோட்டை அரசு கல்லூரியில் படித்து வருகிறார். வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஜெயபாண்டி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News