உள்ளூர் செய்திகள்

தூய்மை விழிப்புணர்வு வார விழா

Published On 2023-09-23 09:54 GMT   |   Update On 2023-09-23 09:54 GMT
  • மதுரை ெரயில் நிலையத்தில் தூய்மை விழிப்புணர்வு வார விழா நடந்தது.
  • மருத்துவ கண்காணிப்பாளர் பாஸ்கர் தொடங்கி வைத்தார்.

மதுரை

மதுரை கோட்டத்தில் உள்ள ெரயில் நிலையங்களில் தூய்மை விழிப்புணர்வு இரு வார விழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை ெரயில் நிலையத்தில் தூய்மை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை ெரயில்வே மருத்துவமனை கூடுதல் முதன்மை மருத்துவ கண்காணிப்பாளர் பாஸ்கர் தொடங்கி வைத்தார்.

பேரணியில் மதுரை கல்லூரி, சரஸ்வதி நாராயணன் கல்லூரி, தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த 120 தேசிய மாணவர் படைப்பிரிவு வீரர்கள் கலந்து கொண்டு தூய்மை விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மதுரை கோட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேலாளர் மகேஷ் கட்கரி, உதவி சுகாதார அதிகாரி சுரேஷ், தேசிய மாணவர் படைப்பிரிவு அலுவலர்கள் மதுரை கல்லூரி கார்த்திகேயன், சரஸ்வதி நாராயணன் கல்லூரி கார்த்திகேயன், தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி ஞானப்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News