உள்ளூர் செய்திகள்

ஒப்பந்ததாரர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2023-07-02 08:14 GMT   |   Update On 2023-07-02 08:14 GMT
  • ஒப்பந்ததாரர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
  • படுகாயமடைந்த என்ற பெண் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.

மதுரை

மதுரை மாநகராட்சி 20-வது வார்டுக்குட்பட்ட விளாங்குடி சொக்கநாதபுரம் 1-வது தெரு பகுதியில் தமிழ் முரசு என்பவர் வீடு கட்டி வருகிறார். இந்த பணிகளை அழகுபெருமாள் என்ற ஒப்பந்ததாரர் மேற்கொண்டு வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள எம்.ரெட்டியபட்டியை சேர்ந்த மூக்காயி(52), தொண்டிச் சாமி, கட்டையன்(46), ஜோதி(52) ஆகிய 4 தொழிலாளர்கள் நேற்று கட்டிட வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது மாடிக்கு செல்வதற்காக அமைக்கப் பட்ட படிக்கட்டு கட்டுமானம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் வேலை பார்த்து கொண்டிருந்த 4 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர். படுகாயமடைந்த என்ற பெண் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.

மேலும் 3 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அவர்களை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர் பாக கூடல்புதூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் ஒப்பந்ததாரர் அழகு பெருமாள், பொறியாளர் இளமதி மற்றும் வீட்டின் உரிமையாளர் தமிழ் முரசு ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News