உள்ளூர் செய்திகள்

விபத்து

கார் மோதி வாலிபர் பலி

Published On 2022-06-09 09:35 GMT   |   Update On 2022-06-09 09:35 GMT
  • சேடப்பட்டி அருகே கார் மோதி வாலிபர் பலியானார்.
  • மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் சேடப்பட்டி அருகே உள்ள ஜம்புலபுரத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் பசும்பொன் (வயது25). இவர் மைக்செட் அமைப்பாளர். நேற்று கள்ளிக்குடி அருகே லாலாபுரம் கிராமம் மற்றும் திருமங்கலம் காமராஜபுரம் பகுதிகளில் திருவிழாவிற்காக மைக்செட் போட்டுள்ளார்.

நேற்று மாலை பசும்பொன், அவரது நண்பர் வண்டபுலியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (22) ஆகிய இருவரும் திருமங்கலத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். கோபாலகிருஷ்ணன் ேமாட்டார் சைக்கிளை ஓட்டினார். பசும்பொன் பின்னால் அமர்ந்து இருந்தார்.

அவர்கள் திருமங்க லம்-மதுரை நான்கு வழிச்சா லையில் குதிரைசாரிகுளம் விலக்கு பகுதியில் சென்றபோது, பின்னால் நெல்லையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட பசும்பொன் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கோபாலகிருஷ்ணன் படுகாயமடைந்தார். இதுபற்றி தகவல் கிடைத்த தும் திருமங்கலம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான பசும்பொன் உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த கோபாலகிருஷ்ணன் மதுரை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து பற்றிய புகாரின்பேரில் திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த கார் டிரைவர் சிவஞானத்திடம் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News