சாலை மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
நேர்காணல் ரத்து செய்யப்பட்டதால் தேர்வாளர்கள் 'திடீர்' மறியல்
- நேர்காணல் ரத்து செய்யப்பட்டதால் தேர்வாளர்கள் ‘திடீர்’ மறியலில் ஈடுபட்டனர்.
- தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மதுரை
மதுரை மண்டலத்தில் 20-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு பருவகால பணியாளர்களை நியமிக்க நுகர்பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.
விண்ணப்பித்த அனைவருக்கும் நேர்கா ணல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் தற்காலிக பருவகால உதவு பவர் பணியிடங்களுக்கு 16ந் தேதி (இன்று) காலை 10 மணி அளவில் நேர்காணல் நடக்கிறது.
விண்ணப்பதாரர்கள் மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், பாஸ்போர்ட் புகைப்படம், ஆதார் அடையாள அட்டை, இருப்பிட சான்றுகளுடன் நேர்காணலுக்கு வர வேண்டும். இதில் கலந்து கொள்வதற்கு பயணப்படி வழங்கப்படமாட்டாது. நேர்காணலுக்கான நாளில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். மற்ற நாட்களில் அனுமதிக்க இயலாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து 50-க்கும் மேற்பட்டோர் குருவிக்காரன் சாலையில் உள்ள நுகர்பொ ருள் வாணிபக் கழக அலுவலகத்துக்கு காலையிலேயே வந்து விட்டனர்.
பணியாளர் தேர்வுக்கான நேர்காணல் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனை கண்டித்து
50-க்கும் மேற்பட்டோர் குருவிக்காரன் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.