உள்ளூர் செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை

Published On 2023-07-14 14:43 IST   |   Update On 2023-07-14 14:43:00 IST
  • வீட்டின் பூட்டை உடைத்து தங்கம்- வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
  • உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

உசிலம்பட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மலைப்பட்டியைச்சேர்ந்த வர் அன்பு (வயது 49). இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தோசைகடை நடத்தி வருகிறார். இதனால் அன்பு குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார்.

இதன் காரணமாக மலைப்பட்டியில் உள்ள இவரது வீடு பெரும்பாலான நேரங்களில்பூட்டியே கிடக்கும். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கு இருந்த பீரோக்களை உடைத்து திறந்து தங்க நகைகள், வெள்ளி பொருட் களையும், கண்காணிப்பு கேமராக்களின பதிவுகள் கொண்ட ஹார்ட் டிஸ்க்கை யும் திருடிச் சென்றனர்.

இன்று காலை வீடு திறக்கப்பட்டு கொள்ளை யடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். முதல்கட்ட விசாரணையில் 18 பவுன் நகை, ஒரு கிலோ மதிப்பிலான வெள்ளி பொருட்கள் திருடு போயிக்கலாம் என தெரியவந்துள்ளது. வீட்டின் உரிமையாளர் வந்த பின்பு தான் திருடு போன பொருட்களின் உண்மையான மதிப்பு தெரியவரும்.

இந்த கொள்ைள சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News