உள்ளூர் செய்திகள்

இந்திய உழவர் கூட்டுறவு நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

Published On 2023-09-27 14:33 IST   |   Update On 2023-09-27 14:33:00 IST
  • இந்திய உழவர் கூட்டுறவு நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
  • யூரியா உரத்தால் மண் வளம் பாதிப்பை தவிர்க்க விளக்கம் அளிக்கப்பட்டது.

மதுரை

இந்திய உழவர் கூட்டுறவு நிறுவனம் (இப்கோ) சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் மதுரை மண்டல இணைப்ப திவாளர் சி.குருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள கூட்டு றவுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து கூட்டுறவு சங்க செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

விவசாய பெருமக்கள் அதிக அளவு யூரியா உரம் பயன்படுத்துவதால் மண் வளம் பாதிக்கப்படுவதை தவிர்த்திட இப்கோ, நானோ யூரியா, இப்கோ டி.ஏ.பி. மற்றும் சகாரிக்கா உரங்கள் பயன்படுத்துவதற்கான வழி முறைகள் குறித்து இப்கோ நிறுவன அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கூட்டுறவு விற் பனை இணையம் (டான் பெட்) துணைப் பதிவாளரும், மண்டல மேலாளருமான ச.பார்த்திபன், டான்பெட் நிறுவன புதிய தயாரிப்பு உரங்களின் சிறப்புகள் பற் றியும், விவசாயிகள் பயன் பெறும் வகையில் டான் பெட் புதிய தயாரிப்பு உரங் கள் பெற்று விநியோகம் செய்திடுமாறும் தெரிவித்தார். இதில் இப்கோ நிறுவ மாநில விற்பனை மேலாளர், டான்பெட் எரியோடு உர ஆலை வல்லுநர், கூட்டுறவுத் துறை சார்ந்த அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News