உள்ளூர் செய்திகள்

ஆட்டோ எக்ஸ்போ-2023 கண்காட்சி

Published On 2023-10-01 08:27 GMT   |   Update On 2023-10-01 08:27 GMT
  • தமுக்கம் மைதானத்தில் ஆட்டோ எக்ஸ்போ-2023 கண்காட்சி நாளை வரை நடக்கிறது
  • ஓர்க்ஷாப் டூல்ஸ் உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளன.

மதுரை

தமிழ்நாடு ஆட்டோ மொபைல் மற்றும் அலைடு இன்டஸ்ட்ரீஸ் பெடரேஷன் மற்றும் தமிழ்நாடு மோட்டார் பார்ட்ஸ்டீலர்ஸ் அசோசியே சன் சார்பில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநில அளவி லான ஆட்டோமொபைல்ஸ் கண்காட்சியை நடத்துகிறது.

இந்த ஆண்டுக்கான கண் காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. கண்காட் சியை சுந்தரம் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் சரத் விஜயராகவன் திறந்து வைத் தார்.

இதில், மதுரை மோட் டார்ஸ் பார்ட்ஸ் வியாபாரி கள் சங்கத்தலைவர் சிதம்ப ரம், டி.ஏ.ஏ.ஐ.எப், தலைவர் ராஜேஸ்வரன், கண்காட்சி தலைவர் முருகேசன், செய லாளர் சிதம்பரம், துணை தலைவர் சதீஷ்குமார், பொருளாளர் சிதம்பர நாதன், டி.வி.எஸ். ஆட்டோ மொபைல்ஸ் சொலியூ ஷன்ஸ்மேலாண்மை இயக்கு னர் சீனிவாசராகவன், ரானோ ஆப்டர் மார்க்கெட் பிசினஸ் தலைவர் கிரி பிரசாத், ரூட் இன்டஸ்ட்ரீஸ் இந்தியா நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் சரவணசுந்தரம், எம்.என். ஆட்டோ புராடெக்ட்சுந்தா ராஜன், கண்காட்சி ஒருங்கி ணைப்புகுழு உறுப்பினர் ரவி, லயன் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சியானது இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் முன்னணி இருசக்கர வாகன கார் மற்றும் நிறுவனங்கள், உதிரி பாகங் கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 140 அரங்குகள் அமைத்துள்ளன.

குறிப்பாக வாகனங்களின் உதிரி பாகங்கள், உயர், டியூப், பேட்டரி. பேரிங் கேபிள்கள், ஓர்க்ஷாப் டூல்ஸ் உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளன.

இந்த கண்காட்சி மெக்கா னிக்குகள் மட்டுமின்றி வாக னங்கள் ஓட்டுனர்கள். வாகன உரிமையாளர்க ளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பார்வையா ளர்களுக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறை குலுக்கல் முறையில் பரிசு கள் வழங்கப்படுகின்றன. கண் காட்சியை இலவசமாக காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை பார்வையிட லாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News