- மொபட்டில் சென்ற முதியவர் பலியானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள வாவிடமருதூர் மேலத் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது74). இவர் புது நத்தம் ரோட்டில் பாலத்தின் கீழே மொபெட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலை யோரத்தில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த காரின் அருகே மொபட் வந்தபோது டிரைவர் சிக்னல் எதுவும் செய்யாமல் திடீரென கதவை திறந்தார். இதனால் மொபட் எதிர் பாராத விதமாக கார் கதவு மீது மோதியது. இதனால் முருகன் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார்.
அப்போது பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த மற்றொரு கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் படுகாயமடைந்த முருகனை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து முருகனின் மகன் செந்தில் குமார் போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்தார். போலீசார் நின்றிருந்த கார் டிரைவர் உத்தங்குடி லேக் ஏரியாவை சேர்ந்த சுதர்சன் (43), மற்றொரு கார் டிரைவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.