உள்ளூர் செய்திகள்

அலங்காநல்லூரில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-09 07:24 GMT   |   Update On 2022-12-09 07:24 GMT
  • அலங்காநல்லூர்-பாலமேட்டில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தி.மு.க. அரசின் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர் செயலாளர் அழகுராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன், பேரூராட்சி கவுன்சிலர் நாட்டாமை சுந்தர், துணை செயலாளர் சம்பத், பாசறை மாவட்ட இணை செயலாளர் உமேஷ் சந்தர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜ்குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோன்று பாலமேடு பேரூர் அ.தி.மு.க. சார்பில் நகரச் செயலாளர் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரூராட்சி துணை சேர்மன் ராமராஜ், ராஜவேல் பாண்டியன், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலமேடு பஸ் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News