உள்ளூர் செய்திகள்

வீரமாமுனிவருக்கு முழு உருவ சிலை

Published On 2022-11-08 14:16 IST   |   Update On 2022-11-08 15:23:00 IST
  • மதுரையில் வீரமாமுனிவருக்கு முழு உருவ சிலை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
  • புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி மாணவர் சுபநிதி சுப்பிரமணியன், வீரமாமுனிவரின் தமிழ் தொண்டை எடுத்துரைத்தார்.

மதுரை

வீரமாமுனிவரின் 343-வது பிறந்த நாளையொட்டி மதுரை பாத்திமா கல்லூரி ரவுண்டானாவில் உள்ள அவரது சிலைக்கு புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி தாளாளர் சேவியர், உதவி தலைமை ஆசிரியர் மரிய அருள்செல்வம், தலைமை ஆசிரியர் ஜோசப், தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி வளாக அதிபர் மரியநாதன், தாளாளர் ஸ்டீபன் லூர்து பிரகாசம், தலைமை ஆசிரியர் சேவியர் ராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அறக்கட்டளை செயலாளர் ஜெயராஜ் வரவேற்றார். புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி மாணவர் சுபநிதி சுப்பிரமணியன், வீரமாமுனிவரின் தமிழ் தொண்டை எடுத்துரைத்தார்.

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வீரமாமுனிவருக்கு முழு உருவ சிலை அமைக்க வேண்டும். சிலை வளாகத்தை சீர்மிகு வளாகமாக மாற்றி அமைக்கவும், அறக்கட்டளை சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

Tags:    

Similar News