மோட்டார் சைக்கிள் மோதி 3 வயது சிறுவன் பலி
- மோட்டார் சைக்கிள் மோதி 3 வயது சிறுவன் பலியானார்.
- சிந்துபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள கரடிகள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுகந்தி இவர்களுக்கு கவின் என்ற மூன்று வயதில் மகன் உள்ளான். இந்த நிலையில் சம்பவத் தன்று 3 வயது மகன் கவினுடன் சுகந்தி தனது அண்ணன் சுரேசுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சிந்துப்பட்டி போலீஸ்சரகம் பகுதியில் சென்றனர். அப்பொழுது சுரேஷ் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப் பொழுது கவின் தனது சித்தப்பாவிடம் செல்வதாக தாயிடம் கூறிவிட்டு திடீ ரென்று சாலையை கடக்க முயன்றான். அப்பொழுது அங்கு வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத வித மாக கவின் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்தி லேயே கவின் பரிதாபமாக இருந்தான் இதுகுறித்து சிந்துபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த விஜயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.