உள்ளூர் செய்திகள்

தீபாவளி பண்டிகைக்கு கூடுதலாக 7 வந்தே பாரத் ரெயில் இயக்கம்

Published On 2023-11-14 07:09 GMT   |   Update On 2023-11-14 07:09 GMT
  • தீபாவளி பண்டிகைக்கு கூடுதலாக 7 வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.
  • தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய வழித்தடங்களில் நின்று செல்லும்.

மதுரை

தென்னக ரெயில்வே மதுரை கோட்ட அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகளின் வசதிக்காக சென்னை-நெல்லைக்கு கூடுதலாக 7 வந்தே பாரத் ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி வருகிற 16, 23, 30 மற்றும் டிசம்பர் 7, 14, 21, 28 ஆகிய நாட்களில் சென்னை-நெல்லைக்கும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06067) சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும்.

மறு மார்க்கத்தில் அதே நாட்களில் நெல்லை- சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் (06068) மாலை 3 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூருக்கு சென்றடையும்.

இந்த சிறப்பு ரெயில் வழக்கம் போல தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய வழித்தடங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News