உள்ளூர் செய்திகள்

6 நாள் சித்த மருத்துவ கருத்தரங்கு

Published On 2023-09-06 07:33 GMT   |   Update On 2023-09-06 07:33 GMT
  • கோகிலா சித்த மருத்துவமனை சார்பில் 6 நாள் சித்த மருத்துவ கருத்தரங்கு நடந்தது.
  • (சித்தா) ரோஜா ரமணி குத்து–விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

மதுரை

மதுரை கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மதுரை, மத்திய ஆயுஷ் அமைச்சகம் நிதி உதவியுடன் சித்த மருத் துவர்களுக்கான தோல் நோய்கள் மற்றும் அழகு சிகிச்சைக்கான ஆறு நாட் கள் தொடர் மருத்துவ கருத் தரங்கு நடைபெற்று வருகி–றது. இந்த நிகழ்ச்சியை பூவந்தி அரசு ஆரம்ப சுகா தார நிலைய உதவி மருத்துவ அலுவலர் (சித்தா) ரோஜா ரமணி குத்து–விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை டாக்டர். வெங்கடேஷ் வரவேற்றார். இதில் எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன், விருதுநகர் மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் சங்குமணி, மத்திய சித்தா ஆராய்ச்சி கவுன்சில் ஆராய்ச்சி அலுவலர் டாக்டர். மீனா, தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்கு னர் டாக்டர். மீனாகுமாரி, துச்சேரி மண்டல சித்த ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொறுப்பு) டாக்டர். சத்யரா ஜேஸ்வரன், டாக்டர். ஜெய வெங்கடேஷ்,

கோகிலா சித்த மருத்துவ மனை மற்றும் ஆராய்ச்சி மைய உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர். பவித்ரா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனை வரையும் அருப்புக்கோட்டை சித்த மருத்துவமனை மருத்து வர் மணிகண்டன் வாழ்த்தி பேசினார். முடிவில் கோகிலா சித்த மருத்துவ மனை உயர் நிர்வாக அலுவ லர் செந்தில்நாதன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News