உள்ளூர் செய்திகள்

இளம்பெண்கள் உள்பட 4 பேர் மாயம்

Published On 2023-05-20 08:36 GMT   |   Update On 2023-05-20 08:36 GMT
  • இளம்பெண்கள் உள்பட 4 பேர் மாயமானார்கள்.
  • பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மதுரை

மதுரை வெளிச்சநத்தம் வி.மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது பெண் புதூர் பகுதியில் உள்ள ஒரு மையத்தில் டைப்ரைட்டிங் பயின்று வருகிறார்.

சம்ப வத்தன்று டைப்ரைட்டிங் மையத்திற்கு செல்வதாக கூறிச் சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டு பிடிக்க முடிய வில்லை.

இது குறித்த புகாரின் பேரில் சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

வாடிப்பட்டி அருகே உள்ள பெரிய ஊர்சேரியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி பூமா (30). சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்க ளில் தேடி பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் ராஜா புகார் செய்தார்.அலங்காநல்லூர் அருகே உள்ள மேலப்பனங்காடி வாகைகுளத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து ஆனந்த குமாரின் மனைவி ரதி அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.மதுரை குலமங்கலம் யோகநரசிம்மன் நகரை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மகள் கீர்த்திகா (19). சம்பவத்தன்று வெளியே சென்று வருவதாக கூறிச் சென்ற இவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து சரவண குமார் மகளை கண்டுபிடித்து தருமாறு அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News