கலைத்திருவிழாவில் 31 பள்ளிகள் பங்கேற்பு
- திருமங்கலத்தில் நடந்த கலைத்திருவிழாவில் 31 பள்ளிகள் பங்கேற்றன.
- இந்த கலைத்திருவிழா திருமங்கலம் அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
திருமங்கலம்
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2022-2023ம் ஆண்டிற்கான கலைத்திருவிழா திருமங்கலம் அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் 31 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
6-ம் வகுப்பு முதல் முதல் 8-ம் வகுப்பு வரை வரையிலான மாணவர்க ளின் கலைநிகழ்ச்சிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தொடங்கி வைத்தார். பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட உதவித்திட்ட அலுவலர் கார்மேகம், மாவட்ட கல்வி அலுவலர் செல்வகணேஷ், வட்டார கல்வி அலுவலர்கள் சின்னவெள்ளைச்சாமி, நமச்சிவாயம், பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் ஸ்ரீதேவி சண்முகம் ஆகி யோர் விழாவில் கலந்து கொண்டனர்.
விழாவில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், நாடகம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கர்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்த கலைதிருவிழாவில் 1500 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகள் மாநில மற்றும் வெளிநாட்டு கலை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறலாம் என்பதால் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.