உள்ளூர் செய்திகள்
- கோவில் கும்பாபிஷேகத்தில் 3 பெண்களிடம் நகை பறிக்கப்பட்டது.
- மேலூர் போலீஸ் டி.எஸ்.பி. ஆர்லியஸ் ரெபோனி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சுக்காம்பட்டியில் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலூர் பகுதியை சேர்ந்த தங்கமலர் என்பவர் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டிருந்த போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர் அணிந்திருந்த 2 பவுன் 4 கிராம் நகையை மர்ம நபர் திருடி சென்றார்.
இதே போல் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற மனோரஞ்சிதம் (62) என்பவரிடம் 2 பவுன் நகையும், பாண்டியம்மாள் (45) என்பவரிடம் 3 1/2 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் மேலூர் போலீஸ் டி.எஸ்.பி. ஆர்லியஸ் ரெபோனி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.