உள்ளூர் செய்திகள்

இளம்பெண்-சிறுவன் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-07-15 08:45 GMT   |   Update On 2023-07-15 08:45 GMT
  • மதுரையில் இளம்பெண்-சிறுவன் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை பெத்தானியா புரம் திலீபன் குறுக்கு தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் சங்கீதா (வயது 23). இவர் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கரிமேடு போலீஸ் நிலையத்தில் சங்கீதாவின் தந்தை முருகன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காளவாசல் பாண்டியன் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் கலையரசன் (17). இவர் கடந்த சில மாதங்களாக உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிறுவனின் தந்தை முனியாண்டி கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்லூர் ஜான்சிராணி புரம் முதல் தெருவை சேர்ந்தவர் தவமுருகன் (52), கூலித் தொழிலாளி. இவருக்கு மதுப்பழக்கம் இருந்தது. இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தவமுருகனின் மனைவி நல்லம்மாள் செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News