நர்சை அடித்து கொன்ற கணவர் உள்பட 3 பேர் கைது
- நர்சை அடித்து கொன்ற கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை முனியாண்டி புரத்தைச் சேர்ந்தவர் சதீஷ் குமார் (வயது 32), கட்டிட தொழிலாளி. இவரும், ரம்யா (22) என்ற பெண்ணும் காதலித்து கடந்த திருமணம் செய்து கொண்டனர். திருப்பரங் குன்றம் பகுதியில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனத்தில் ரம்யா நர்சாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை ரம்யா வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கும், கணவருக்கும் இடையில் குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது சதீஷ்குமார், கர்ப்பிணியாக இருந்த ரம்யா நடத்தை தொடர்பாக அவதூறாக பேசினார். மேலும் சாதியை குறிப்பிட்டு இழிவாக பேசிய தாகவும் கூறப்படுகிறது. இதனை ரம்யா தட்டி கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், கர்ப்பிணி மனைவி என்றும் பாராமல் உருட்டு கட்டையால் ரம்யாவை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ரம்யா சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக ரம்யா வின் தந்தை செல்வம் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் சதீஷ்குமார், அவரது தந்தை செல்வம் (55), தாய் பஞ்சவர்ணம் (52) ஆகிய 3 பேரை கைது செய்தனர், அவர்களிடம் கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.