உள்ளூர் செய்திகள்

நர்சிங் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் தற்கொலை

Published On 2022-10-01 08:24 GMT   |   Update On 2022-10-01 08:24 GMT
  • நர்சிங் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் தற்கொலை செய்தனர்.
  • சிந்துப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம்

திருமங்கலம் அருகே உள்ள நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கராஜன். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகள் கிருத்திகா (வயது 17). இவர் விடத்தகுளத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி இருந்து திருமங்கலத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.

சில மாதங்களாக கிருத்திகாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த கிருத்திகா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சிந்துப்பட்டி அருகே உள்ள நாட்டார் மங்கலத்தைச் சேர்ந்தவர் பூமிராஜன். இவரது மனைவி கலா ராணி (வயது 45). இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன்- மனைவியிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.

இதனால் வாழ்க்கை விரக்தி அடைந்த கலாராணி சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கினார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News