உள்ளூர் செய்திகள்

புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது

Published On 2023-06-07 08:15 GMT   |   Update On 2023-06-07 08:15 GMT
  • புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • 5 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

திருமங்கலம்

திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது38). இவரது வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பதாக திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தபோது 12 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் சின்னசாமியை கைது செய்தனர்.

திருமங்கலம் நகர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த சிவசேகர் (57) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அங்கு 5 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் சிவசேகரை கைது செய்தனர்.

Tags:    

Similar News