உள்ளூர் செய்திகள்

கைதான 2 பேர்

அரசு பெண் ஊழியரிடம் நகை பறித்த 2 பேர் கைது

Published On 2022-12-29 09:47 GMT   |   Update On 2022-12-29 09:47 GMT
  • அரசு பெண் ஊழியரிடம் நகை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • அவர் வைத்திருந்த கைப்பையில் ¼ பவுன் தங்க கடிகாரம், செல்போன், ஆதார், பான் கார்டுகள், ரூ.1500 ரொக்கம் ஆகியவை இருந்தன.

மதுரை

மதுரை அய்யர் பங்களா ஸ்ரீநகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது66). பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று ராஜேஸ்வரி வெளியே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் வைத்திருந்த கைப்பையை பறித்து சென்றனர். அதில் ¼ பவுன் தங்க கடிகாரம், செல்போன், ஆதார், பான் கார்டுகள், ரூ.1500 ரொக்கம் ஆகியவை இருந்தன. இதுகுறித்து தல்லாகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

உதவி கமிஷனர் ஜெகன்நாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டது கேசவசாமி தெருவை சேர்ந்த துரைபாண்டி மகன் விஜி என்ற சுப்பு (24), அவரது நண்பர் வேலூர் மாவட்டம் கோணவட்டத்தை சேர்ந்த முதார்சீர் (38) என தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News