உள்ளூர் செய்திகள்

பெண்ணை தாக்கிய 2 பேர் கைது

Published On 2022-07-31 09:24 GMT   |   Update On 2022-07-31 09:24 GMT
  • பெண்ணை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • தாக்கிய 2 பேரும் ஏற்கனவே பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டவர்கள்.

 மதுரை

மதுரை காமராஜர் சாலை, சிம்மபுரம் தெருவை சேர்ந்த தங்கராஜ் மனைவி சுபஸ்ரீ (21). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன் விரோதம் உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை சுபஸ்ரீ வீட்டில் இருந்தார். அங்கு வந்த 2 பேர் அவரை தாக்கி விட்டு தப்பினர்.

இதுகுறித்து சுபஸ்ரீ தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். அதில் என்னை தாக்கிய 2 பேரும் ஏற்கனவே பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டவர்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபஸ்ரீயை தாக்கிய சிவகுமார் (29), நிலக்கோட்டை வீலிநாயக்கன்பட்டி, கிழக்கு தெருவை சேர்ந்த மாணிக்கம் (35) ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

Similar News