உள்ளூர் செய்திகள்

14 பவுன் நகை-4 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை

Published On 2023-06-09 09:32 GMT   |   Update On 2023-06-09 09:32 GMT
  • வீட்டின் கதவை உடைத்து 14 பவுன் நகை-4 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மதுரை

மதுரை அண்ணாநகர் கோமதிபுரம் செவ்வந்தி தெருவை சேர்ந்தவர் மலர்கொடி(வயது57). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவில் இருந்த 14 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம், 4 கிலோ வெள்ளிப்பொருட்கள் ஆகி யவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.

இந்த நிலையில் ஊர் திரும்பிய மலர்கொடி வீட்டின் கதவு உடைக்கப் பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை, பணம் கொள்ளை போயிருந்தது. இது குறித்து அவர் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி கைரேகை, தடயங்களை சேகரித்தனர். கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News