உள்ளூர் செய்திகள்

மதுரையில் நடைபெற்ற நடைபயணத்தில் தொண்டர்களுடன் அண்ணாமலை நடந்துவந்த காட்சி.

தமிழகத்திற்கு ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடியை இதுவரை பிரதமர் மோடி ஒதுக்கீடு செய்துள்ளார்-அண்ணாமலை

Published On 2023-08-06 12:23 IST   |   Update On 2023-08-06 12:23:00 IST
  • தமிழகத்திற்கு ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடியை இதுவரை பிரதமர் மோடி ஒதுக்கீடு செய்துள்ளார் என்று அண்ணாமலை கூறினார்.
  • துணை தலைவர் ஜோதி மணிவண்ண உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மதுரை

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் நடைபயணத்தின் தொடர்ச்சியாக நேற்று மதுரையில் யாத்திரையை தொடங்கினார். மதுரை மாநகர் பகுதியில் ராமகி–ருஷ்ணா மடத்தில் மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. ஊடகப்பிரிவு சார்பில் மாவட்ட தலைவர் ரவிச்சந் திர பாண்டியன் தலைமை–யில்,

மாவட்ட துணை தலை–வர்கள் ராமச்சந்திரன், வேல்பாண்டியன், செயலா–ளர்கள் கருணாகரன், முத்து விக்னேஷ், மாரி ராஜா ஆகியோர் முன்னிலையில் ராமகிருஷ்ணா மடத்தின் முன்பாக உள்ள விவேகா–னந்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

அதன் பின்பு அவருக்கு மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் ரிசர்வ் லயன் சந்திப்பில் பூரண கும்ப மரியாதையுடன் மேளதாளம் முழங்க பரிவட்டம் கட்டி பலத்த வரவேற்பு அளிக்கப் பட்டது. அப்போது அவர் பேசியதாவது:-

என் மண், என் மக்கள் யாத்திரை மாறுபட்ட யாத் திரையாகும். பிரதமர் மோடி தமிழகத்திற்கு இது–வரை ரூ.10 லட்சத்தி 76 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய அரசு நலத்திட்டங்களால் தமிழ–கத்தில் மிகப்பெரிய வளர்ச்சி மற்றும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க. எம்.பி.க்கள் மக்கள் பிரச்சனை குறித்து இதுவரை பேச–வில்லை. மக்களைப் பற்றி தி.மு.க.வுக்கு கவலை இல்லை. தி.மு.க. ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது.

நெஞ்சுவலி வந்து ஒரு அமைச்சர் புழல் சிறையில் தூங்குகிறார். எந்த வேலை–யும் செய்யாமல் அமைச்சர் சம்பளம் வாங்குகிறார். ஊழல் செய்த அமைச்சருக்கு ஊதியம் கொடுக்கிறார் முதலமைச்சர். 5 ஆம் தமிழ்சங்கம் என குறிப்பிட் டால் அதற்கு காரணம் மோடி என குறிப்பிடலாம். தமிழ்மொழி பயில வேண் டும் என மோடி கூறினார். திருக்குறளையும், ஆத்தி–சூடியையும், மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார். உலகத்தின் தொன்மையான மொழி தமிழ் என மாண–வர்களிடம் குறிப்பிட்டார்.

தமிழை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் தி.மு.க. பேனா சிலை வைக்கிறது. ஆனால் தமிழை வளர்க்க எந்த முயற்சியும் இல்லை எந்த நிதியும் ஒதுக்கவில்லை, கடந்த கல்வி ஆண்டில் 54 ஆயிரம் மாணவர்கள் தமிழ் தேர்வில் தோல்வியடைந் துள்ளனர். 1967-ல் இருந்து 5 முறை ஆட்சி செய்தார்கள் இதுதான் தமிழ்வளர்க்கும் லட்சணமா? மோடி பெய–ரில் எந்த திட்டமும் இல்லை. பிரதமர் என்ற பெயரில் இருக்க வேண்டும் என விரும்பி திட்டங்களுக்கு பெயர் வைத்துள்ளார்.

இவ்வாறு அவர் பேசி–னார் .

இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் பேரா–சிரியர் ராம சீனிவாசன், பெருங்கோட்ட பொறுப்பா–ளர் கதலி நரசிங்க பெரு–மாள், மாவட்ட பார்வையா–ளர் கார்த்திக் பிரபு, மாவட்ட பொது செயலாளர் ராஜ் குமார், பாலகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் ஜோதி மணிவண்ண உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News