மத்தூர் கலைமகள் கலாலயா பள்ளியில்பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் சாதனை
- பிளஸ்-2 பொதுத்தேர்வில் பர்துல் அர்சித்தா என்ற மாணவி 600-க்கு 593 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.
- தொடர்ந்து இப்பள்ளி 17 ஆண்டுகளாக பிளஸ்-2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் கலைமகள் கலாலயா மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளியில் 2023-2024 கல்வி ஆண்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் பர்துல் அர்சித்தா என்ற மாணவி 600-க்கு 593 மதிப்பெண் பெற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3-ம் இடமும், போச்சம்பள்ளி தாலுக்கா அளவில் முதல் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மேலும் இயற்பியலில் 100-100-க்கு 3 மாண வர்களும், வேதியலில் 100-100 3 மாணவர்களும், கணிதத்தில் 100-100 3 மாணவர்களும் தமிழ், ஆங்கிலம், உயிரியல் ஆகிய பாடங்களிலும் 100-90 மதிப்பெண்களை பெற்று மாணவர்கள் 100 சதவீதம் பெற்று சாதனை படைத்துள்ளனர். முதலிடம் பெற்ற மாணவிக்கு பள்ளி இயக்குனர் அமுதினி, தாளாளர் ராசேந்திரன், முதல்வர் சூரியமூர்த்தி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், பணியாளர்களும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவற்றிற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை பள்ளி இயக்குனர், தாளாளர் பாராட்டினர்.
தொடர்ந்து இப்பள்ளி 17 ஆண்டுகளாக பிளஸ்-2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்பள்ள்யில் நீட், ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் பயிற்று விக்கப்படுகின்றன. 2023-2024 ஆண்டிற்கான எல்.கே.ஜி. முதல் 11- வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.