உள்ளூர் செய்திகள்

காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை

Published On 2022-07-06 14:59 IST   |   Update On 2022-07-06 14:59:00 IST
  • அம்பை பால்பண்ணை தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் இசக்கிமுத்து(வயது 29).
  • இசக்கிமுத்து சரிவர வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து வந்ததாகவும், அதனை அவரது மனைவி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

நெல்லை:

அம்பை பால்பண்ணை தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் இசக்கிமுத்து(வயது 29). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இசக்கிமுத்து சரிவர வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து வந்ததாகவும், அதனை அவரது மனைவி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்து காணப்பட்ட இசக்கிமுத்து நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள சக்தி கோவில் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அவரை மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பல னின்றி நேற்று அவர் இறந்தார்.

Tags:    

Similar News