உள்ளூர் செய்திகள்

குலுக்கல் லாட்டரி சீட்டு விற்றவரையும் அவரை பிடித்த போலீசாரையும் படத்தில் காணலாம்.

திண்டிவனம் பகுதியில் குலுக்கல் முறையில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது: ரூ.50 ஆயிரம் பணம்- செல்போன்கள் பறிமுதல்

Published On 2023-06-23 07:54 GMT   |   Update On 2023-06-23 07:54 GMT
  • கார் டிரைவர்களை குறி வைத்து ஒரு கும்பல் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தனர்.
  • 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன், கையால் எழுதப்பட்ட லாட்டரி சீட்டுகள், 50 ஆயிரம் ரொக்க பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் லேபை அருகேலாரி மற்றும் கார் டிரைவர்களை குறி வைத்து ஒரு கும்பல் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருவதாக ஒலக்கூர் சப் -இன்ஸ்பெக்டர் ஆனந்தராசனுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதைக் கண்டு மோட்டார் சைக்கிளில் ஒருவர் தப்பி ஓட முயன்றார்.

அப்பொழுது அவரை மடக்கி பிடித்து அவர் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் அருகே இருந்த இன்னொரு மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது அருகே இருந்த வண்டியில் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன், கையால் எழுதப்பட்ட லாட்டரி சீட்டுகள், 50 ஆயிரம் ரொக்க பணம் இருப்பது கண்டுபிடி க்கப்பட்டது. தப்பி ஓட முயன்ற நபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் அவர் சாரம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் (வயது 49,) என்பதும் இவர் பல மாதங்களாக சாரம் லேபைக்கு வரும் லாரி டிரைவர்கள் மற்றும் கூலி தொழிலாளர்களிடம் குலுக்கல் முறையில் பணம் விழுவதாக கூறி அவர்களிடம் சில நம்பர்களை கையால் எழுதி தந்து அவர்களிடம் வாட்ஸ் அப் எண்ணை வாங்கி பணம் விழுந்தால் உங்களுக்கு உடனடியாக கூகுள் பே மற்றும் போன் பே மூலம் பணம் அனு ப்பப்படும் என தெரிவித்ததாகவும் அதை அனுப்பாமல் பலரை ஏமாற்றி வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 3.5 லட்சம் மதிப்பிலான 2 மோட்டார் சைக்கிள், 2 செல்போன்கள்,மற்றும் 50 ஆயிரம் பணம் ஆகியவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News