உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Published On 2023-03-14 10:06 GMT   |   Update On 2023-03-14 10:06 GMT
  • முகமது உவைஸ் (வயது 22), அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் தனது 2 சக்கர வாகனத்தில் லாட்டரி சீட்டுகள் வைத்து விற்பனை செய்தது தெரிந்தது
  • முகமது உவைஸ் மீது வழக்கு பதிவு செய்துஅவரிடமிருந்து ஏராளமான லாட்டரி சீட்டு களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில்ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


கடலூர்:

பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா தலைமையிலான தனி படை, சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டி காந்தி ரோடு அவுலியா நகரை சேர்ந்த முகமது உவைஸ் (வயது 22), அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் தனது 2 சக்கர வாகனத்தில் லாட்டரி சீட்டுகள் வைத்து விற்பனை செய்தது தெரிந்தது. உடனடியாக அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தளர். பின்னர் முகமது உவைஸ் மீது வழக்கு பதிவு செய்துஅவரிடமிருந்து ஏராளமான லாட்டரி சீட்டு களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில்ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News