உள்ளூர் செய்திகள்

கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

Published On 2023-03-28 15:46 IST   |   Update On 2023-03-28 15:46:00 IST
  • கிருஷ்ணகிரி சாலையில் பாகீமானூர் பகுதியில் நேற்று வாகன சோதனையில ஈடுபட்டனர்.
  • 5 கற்களை மத்தூரில் இருந்து ஜெகதேவிக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவிதா மற்றும் அதிகாரிகள் திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி சாலையில் பாகீமானூர் பகுதியில் நேற்று வாகன சோதனையில ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் நின்ற கர்நாடகா பதிவெண் கொண்ட லாரியை சோதனை செய்த போது அதில் 10-கன மீட்டர் கொண்ட 5 கற்களை மத்தூரில் இருந்து ஜெகதேவிக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.

இது குறித்து அதிகாரி பொன்னுமனி கொடுத்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News