உள்ளூர் செய்திகள்
வருகிற 8-ந் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை- கலெக்டர் அறிவிப்பு
- முக்கிய நிகழ்வான அன்னையின் பிறந்தநாள் விழா வரும் எட்டாம் தேதி நடைபெறுகிறது.
- இதனை ஈடுசெய்யும் விதமாக வரும் 24-ம் தேதி சனிக்கிழமை அன்று அலுவலர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை நாள்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா 29ஆம் தேதி முதல் வரும் 8 தேதி வரைநடைபெறுவதை முன்னிட்டு அதன் முக்கிய நிகழ்வான அன்னையின் பிறந்தநாள் விழா வரும் எட்டாம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு அலுவலர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது எனவும் இதனை ஈடு செய்ய விதமாக வரும் 24ஆம் தேதி சனிக்கிழமை அன்று அலுவலர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு வேலை நாளாக அறிவித்தும் விடுமுறை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.