உள்ளூர் செய்திகள்

கோவை மாவட்ட திட்டக்குழு தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்த உள்ளாட்சி பிரதிநிதிகள்

Published On 2023-06-23 09:16 GMT   |   Update On 2023-06-23 09:16 GMT
  • தேர்தலை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பழைய கட்டிட அலுவலகத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது.
  • 28-ந் தேதி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் நடைபெறும்

கோவை,

கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் இன்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கவுன்சிலர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

இதில் கோவை மாவட்டத்திற்கு ஊராட்சியில் இருந்து 5 உறுப்பினர்கள், பேரூராட்சி நகராட்சி மற்றும் மாநகராட்சியில் இருந்து 13 உறுப்பினர்கள் என மொத்தம் 18 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பின்னர் இந்த 18 பேரும் வாக்களித்து ஒருவரை தேர்ந்தெடுப்பர்.

இன்று நடந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள்-17 மாநகராட்சி கவுன்சிலர்கள்-100 மற்றும் 7 நகராட்சிகளில் உள்ள 198 கவுன்சிலர்கள், 33 பேரூராட்சிகளில் உள்ள 513 கவுன்சிலர்கள் என மொத்தம் 825 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். இவர்களில் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி நகராட்சியில் தலா ஒன்று, காளியூர் பேரூராட்சியில் ஒன்று என மொத்தம் 3 காலியிடங்கள் உள்ளன. எனவே 822 கவுன்சிலர்கள் ஓட்டு போட போட்ட உள்ளனர்.

தேர்தலை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பழைய கட்டிட அலுவலகத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது.

தேர்தல் முடிக்கப்பட்டு இன்று மாலை பதிவான வாக்குகள் எண்ணப்படும். 28-ந் தேதி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News