உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.

கோவிந்தபேரி ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் கடன் உதவி

Published On 2023-05-03 14:33 IST   |   Update On 2023-05-03 14:33:00 IST
  • கூட்டத்தில் வறுமை ஒழிப்பு சங்கம் மூலம் கடன் உதவி வழங்கப்பட்டது.
  • பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் , ஊர் பொதுமக்கள் 368 பேர் கலந்து கொண்டனர்.

கடையம்:

கோவிந்தபேரி ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் டி. கே. பாண்டியன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தென்காசி மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் ருக்மணி , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமலை முருகன் , ராஜசேகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் தென்னங்கன்று நடுதல், வறுமை ஒழிப்பு சங்கம் மூலம் கடன் உதவி வழங்குதல் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் இசேந்திரன் ,வார்டு உறுப்பினர்கள் இசக்கி பாண்டி, இளவரசி, பொன்னுத்தாய்,நாகராஜன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சங்கரவேல், கிராம உதவியாளர் சக்தி,வேளாண் அலுவலர் ஜெகன் மற்றும் ஊராட்சி செயலாளர் மூக்காண்டி , ஊராட்சி பணியாளர்கள் மற்றும் ரேசன்கடை பணியாளர் மங்களம், மாரித்துரை ,ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி மாணிக்கம்,ஓய்வு பெற்ற ஆசிரியர் பூலோக பாண்டியன், முன்னாள் தலைவர் சி. ராசு,முன்னாள் துணைத்தலைவர் கணேசம்மாள், முருகன், செல்லப்பா, சிவா மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் , ஊர் பொதுமக்கள் 368 பேர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News