உள்ளூர் செய்திகள்

கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றபோது எடுத்தபடம்.


கிடாரக்குளம் ஊராட்சியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2022-12-02 08:50 GMT   |   Update On 2022-12-02 08:50 GMT
  • கால்நடை சிறப்பு மருத்துவ முகாமை ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி ஆண்டி தொடங்கி வைத்தார்.
  • மருத்துவர்கள் ஊத்துமலை ரமேஷ், வீராணம் சந்திரன், ஆலங்குளம் ராஜா ஜூலியட் ஆகியோர் அடங்கிய குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

ஆலங்குளம்:

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், கிடாரக்குளம் ஊராட்சியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி ஆண்டி முகாமை தொடங்கி வைத்தார். மருத்துவர் பொன்னுவேல் வரவேற்றார். மருத்துவர்கள் தியோபிலஸ் ரோஜர், மகேஸ்வரி, ஜான் சுபாஷ் ஆகியோர் தொழில்நுட்ப உரையாற்றினர்.

மருத்துவர்கள் ஊத்துமலை ரமேஷ், வீராணம் சந்திரன், ஆலங்குளம் ராஜா ஜூலியட் ஆகியோர் அடங்கிய குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். நெட்டூர் கால்நடை உதவி மருத்துவர் ராமசெல்வம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News