உள்ளூர் செய்திகள்

திண்டிவனம் அருகே போலீசாரை தாக்கிய சாராய வியாபாரிகள்,

Published On 2023-01-24 08:35 GMT   |   Update On 2023-01-24 08:35 GMT
  • திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிளில் சாராயம் எடுத்து செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீஸ் வாகனதனிக்கையில் இருந்தனர்,
  • பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் போலீஸாரை தாக்கிவிட்டு சென்றனர்

விழுப்புரம்::

திண்டிவனம் அருகே ரோசனை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் சாராயம் எடுத்து செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர ராஜேந்திரன், காவலர்கள் வெற்றி வேல் மற்றும் அறிவுமதி ஆகியோரின் தலைமையில் போலீசார் தீவனூர் பீம் சிட்டி பழைய காலனி அருகே வாகனத் தணிக்கையில் இருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தை நிறுத்த முற்பட்டனர். ஆனால் அந்த வாகனத்தில் வந்த 2 பேர் நிறுத்தாமல் போலீசாரை தாக்கி தள்ளிவிட்டு சென்றனர் . உடனே போலீசார் பின் தொடர்ந்து துரத்தினர். அப்போது 2 பேரில் ஒருவர் பிடிபட்டார். அவரது பெயர் தேவா என தெரியவந்தது. இவர் ரெட்டணை கிராமத்தை சேர்ந்தவர். தப்பி ஓடியவர் நாகராஜ் என தெரியவந்தது. உடனே தேவாவை கைதுசெய்தனர். இவரிடம் இருந்து 60லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடியவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

Tags:    

Similar News