உள்ளூர் செய்திகள்

வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

செங்கோட்டையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-24 08:50 GMT   |   Update On 2023-08-24 08:50 GMT
  • மத்திய அரசு 3 சட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்வதை கண்டித்து செங்கோட்டையில் வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவா் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

செங்கோட்டை:

மத்திய அரசு 3 சட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்வதை கண்டித்து செங்கோட்டையில் வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க தலைவா் வெங்கடேசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவா் முத்துக் குமாரசாமி, செயலாளா் அருண், பொருளாளா் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனா். மூத்த வக்கீல் கிருஷ்ண மூர்த்தி வரவேற்று பேசினார்.

இதில் வக்கீல்கள் சங்கரலிங்கம், ஆதிபால சுப்பிரமணியன், இளங்கோ, சிதம்பரம், சத்தியசங்கர், நல்லையா, சுபசேகர், ஆசாத், வெங்கடேஷ், முகம்மது சிராஜ், ராம லிங்கம், குமார், வீரபாண்டியன், வைரவன், ராஜா, சிவ சுந்தரவேலன், முத்துராஜ், மாலதி, இசக்கி இந்திரா, கலீலா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News