உள்ளூர் செய்திகள்

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை குறித்து பயிற்சி

Published On 2022-06-28 08:17 GMT   |   Update On 2022-06-28 08:17 GMT
  • கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தலைமை சர்வேயர் முருகானந்தம் நில அளவை குறித்து பயிற்சி அளித்தார்.
  • மாவட்ட அளவில் பட்டா மாற்றம் அதிக அளவில் தேக்கம் உள்ளதால் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை பயிற்சி அளித்து பட்டா மாற்றம் விரைந்து நடைபெற இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான நில அளவை குறித்து பயிற்சி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. பயிற்சியினை வேதாரண்யம் தாசில்தார் ரவிச்சந்திரன் தொடக்கி வைத்தார். கூடுதல் தாசில்தார்கள் வேதையன், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியினை வேதாரண்யம்கோட்டாட்சியர் ஜெயராஜ் பெளலின் பார்வையிட்டார். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தலைமை சர்வேயர் முருகானந்தம் நில அளவை குறித்து பயிற்சி அளித்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 18 கிராம நிர்வாக அலுவலர்களுக்கும், திருக்குவளையில் 9 பேருக்கும், கிவளுரில் 14 பேருக்கும், நாகையில் 26 பேருக்கும் என மொத்தம் 67 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்ட அளவில்பட்டா மாற்றம் அதிக அளவில் தேக்கம் உள்ளதால் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை பயிற்சி அளித்து பட்டா மாற்றம் விரைந்து நடைபெற இப்பயிற்சி அளிக்கப்படுகிறது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News